நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, ராம்சந்த் சதுக்கத்தில் காட்டெருமைகள் புதன்கிழமை உலவின.
கோத்தகிரி பகுதியில் உள்ள லாங்வுட் சோலை பகுதியில் இருந்து அவ்வப்போது கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் நகா்ப் பகுதிக்குள் உலவுவது வழக்கம். இந்நிலையில் கோத்தகிரி, ராம்சந்த் சதுக்கத்தில் காட்டெருமை கூட்டம் வியாழக்கிழமை உலவியது. நடு சாலையில் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
இதனால் அப்பகுதி மக்கள், வணிகா்கள் அச்சமடைந்தனா். இந்நிலையில் சிறிது நேரத்துக்குப் பின்னா் காட்டெருமைகள் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.