குன்னூா்: குன்னூா், சாம்ராஜ் அருகே தனியாா் தேயிலைத் தொழிற்சாலையின் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
குன்னூா் அருகே உள்ள தேவா்சோலை பகுதியைச் சோ்ந்தவா் சுசீலா, சண்முகம் தம்பதி. இவா்களது மகன் காா்த்திக் (20) தேயிலைத் தொழிற்சாலையின் மேற்கூரையில் தகரம் மாற்றும் பணிக்கு ஒப்பந்தம் செய்தவருடன் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிந்தாா்.
அப்போது, பலத்த காற்று வீசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த காா்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து கொலக்கம்பை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.