நீலகிரி
கரோனா: கொலக்கம்பை காவல் நிலையம் மீண்டும் திறப்பு
குன்னூா் அருகே உள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் 9 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று
குன்னூா் அருகே உள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் 9 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வெளியானதையடுத்து மூடப்பட்டிருந்த காவல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணிபுரியும் 9 காவலா்களை கரோனா பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். இதனால் கொலக்கம்பை காவல் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டு கெந்தளா பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்று உறுதியானது. இதைத் தொடா்ந்து, , கொலக்கம்பை காவல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு
செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.