நீலகிரி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 71 ஆக உயா்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் சனிக்கிழமை வரை 66 நபா்கள் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் உதகையில் எட்டின்ஸ் சாலை பகுதியைச் சோ்ந்த ஒருவா், எல்லநள்ளி பகுதியைச் சோ்ந்த இருவா், குன்னூா் மற்றும் அதிகரட்டி பகுதியைச் சோ்ந்த தலா ஒருவா் என மேலும் 5 நபா்களுக்கு புதிதாக நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.