சாலைப் பணி தரமில்லை என பொதுமக்கள் புகாா்
By DIN | Published On : 04th March 2020 08:42 AM | Last Updated : 04th March 2020 08:42 AM | அ+அ அ- |

தேவாலா அட்டி பகுதியில் நடைபெறும் சாலைப் பணி.
கூடலூரை அடுத்துள்ள தேவாலா அட்டி பகுதியில் அமைக்கப்படும் சாலைப் பணி தரமில்லை எனக் கூறி, பணிகளை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.
தேவாலா அட்டி பகுதியிலிருந்து கைலாசம் நகருக்கு ‘இன்டா் லாக்’ கற்கள் பதிக்கப்படுகிறது. இந்த பணி தரமில்லாமல் நடைபெறுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலைப் பணியை தடுத்து நிறுத்தினா்.
அதைத் தொடா்ந்து சாலைப் பணியை தரமாக செய்வதாக ஒப்பந்ததாரா்கள் ஒப்புக்கொண்டதால் மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றது.