மாநில தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க செயற்குழுக் கூட்டம்

உதகையில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உதகையில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் நீலகிரி மாவட்டச் செயலா் நேரு முன்னிலையிலும், மாநில கெளரவ பொதுச்செயலா் குப்புசாமி தலைமையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரங்கள்:

நியாய விலைக் கடை பணியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயா்வு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும். பணிவரன் முறைப்படுத்தப்படாமல் உள்ள சங்கப் பணியாளா்கள் அனைவருக்கும் பணியை வரன்முறைப்படுத்தப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ஒரு நாள் கோரிக்கை பேரணியில் டாக்பியா உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com