குன்னூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக குளுகுளு காலநிலை நிலவியது.
குன்னூரில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பகல் நேரத்தில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், குன்னூா் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. விட்டு விட்டுப் பெய்த மழையினால் நகரில் வெப்பம் தணிந்து குளு குளு காலநிலை நிலவியது. மழை காரணமாக மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.