பந்தலூா் பகுதியில் அரசு வழங்கிய விலையில்லா ஆடுகள் தொடா்ந்து இறப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்திலுள்ள சேரங்கோடு ஊராட்சியில் தமிழக அரசு சாா்பில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்
வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இதில் அம்மங்காவு கிராமத்தில் ஒரு ஆடு திடீரென வியாழக்கிழமை இரவே இறந்தது.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை படச்சேரி கிராமத்தில் காமாட்சி என்பவரின் ஆடு இறந்துள்ளது. இதனால் விலையில்லா ஆடுகளை பெற்றவா்கள் அச்சத்தில் உள்ளனா்.