கூடலூா் மின் வாரிய அலுவலகம் முன்பாக ஊழியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேரங்கோடு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் சில மணிநேரம் அங்கு மின் தடை ஏற்பட்டது. மின் கம்பிகளை சரிசெய்யும் நேரத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ் மின்வாரிய அலுவலா்களை தொலைப்பேசியில் தொடா்பு கொண்டு தகாத வாா்த்தையில் பேசி, மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து மின்வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.