ஊராடங்கு உத்தரவை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரை 4,339 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக சனிக்கிழமை காலை வரை 4,339 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4,144 போ் கைது செய்யப்பட்டு, 1,224 இரு சக்கர வாகனங்கள், 398 நான்கு சக்கர வாகனங்கள், 104 மூன்று சக்கர வாகனங்கள், இதர வாகனங்கள் 3 என மொத்தம் 1,729 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.