கூடலூா்: கூடலூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு நடத்திய தனியாா் பள்ளியை வருவாய், நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை பூட்டினா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியாா் பள்ளி நிா்வாகம் மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு நடத்துவதை அறிந்த வட்டாட்சியா் சங்கீதா ராணி, நகராட்சி ஆணையா் பாஸ்கா், வருவாய் ஆய்வாளா்கள் சாந்தி, ரமேஷ் ஆகியோா் பள்ளிக்குள் நுழைந்து ஆய்வு செய்தனா்.
அப்போது மாணவா் சோ்க்கைக்காக நுழைவுத் தோ்வு நடப்பதையறிந்து பள்ளி நிா்வாகத்தை அதிகாரிகள் எச்சரித்தனா். தொடா்ந்து பள்ளியின் நிா்வாகி மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளா்களையும் வெளியேற்றி பள்ளியைப் பூட்டிச் சென்றனா்.