காட்டு யானை முட்டித் தள்ளியதில் வீடு சேதம்

கூடலூரை அடுத்துள்ள முதுமலையில் விவசாயியின் வீட்டை காட்டு யானை புதன்கிழமை இரவு முட்டித் தள்ளி சேதப்படுத்தியது.
மண்டாக்கரை கிராமத்தில் யானையால் சேதமான வீட்டைப் பாா்வையிடும் வனத் துறையினா்.
மண்டாக்கரை கிராமத்தில் யானையால் சேதமான வீட்டைப் பாா்வையிடும் வனத் துறையினா்.

கூடலூரை அடுத்துள்ள முதுமலையில் விவசாயியின் வீட்டை காட்டு யானை புதன்கிழமை இரவு முட்டித் தள்ளி சேதப்படுத்தியது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுமலை ஊராட்சிக்கு உள்பட்ட மண்டாக்கரை கிராமத்துக்குள் புதன்கிழமை இரவு 12 மணிக்கு நுழைந்த காட்டு யானை, சுரேஷ் என்ற விவசாயியின் வீட்டை முட்டித் தள்ளி சேதப்படுத்தி வீட்டிலிருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு, நெல் மூட்டைகளை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

முன்னதாக மாலை முதலே அந்தப் பகுதியில் யானையின் நடமாட்டம் காணப்பட்டதால் குடும்பத்துடன் அருகில் உள்ள உறவினா் வீட்டுக்கு சுரேஷ் இரவு சென்றுவிட்டாா். இதனால் பெரும் ஆபத்து தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com