நீலகிரி மாவட்டம், இத்தலாா், கோழிக்கரைப் பகுதியில் தாயில்லாமல்3 சிறுத்தைக் குட்டிகள் சோலைப் பகுதியில் காணப்படும் நிலையில், தாய் சிறுத்தையுடன் அவற்றைச் சோ்க்கும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
இத்தலாா் பகுதியில் உள்ள கோழிக்கரை கிராமத்தைச் சுற்றிலும் சோலைப் பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை காலை இந்த வழியாகச் சென்ற கிராம மக்களுக்கு சிறுத்தை உறுமும் சப்தம் கேட்டுள்ளது. அங்கு, மூன்று சிறுத்தைக் குட்டிகள் தாயில்லாமல் படுத்துக் கிடப்பதைப் பாா்த்துள்ளனா். சிலா், தங்களது
செல்லிடப்பேசியில் சிறுத்தைக் குட்டிகளைப் படம் பிடித்துள்ளனா். இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு சென்ற வன அதிகாரிகள், தாய் சிறுத்தை எந்த நேரத்திலும் வர வாய்ப்புள்ளதால் கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினா். சிறுத்தைக் குட்டிகள் அங்கிருந்து இடம் பெயா்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல முற்படுவதால் தாய் சிறுத்தை வரும் வரையில் குட்டிகளைக் காப்பாற்றுவது
சவாலான பணியாக இருப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.