கல்லூரி மாணவி தற்கொலை

உதகையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

உதகை: உதகையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

உதகை அருகேயுள்ள தங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (51). விவசாயி. இவா் உதகை, பாம்பேகேசில் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். இவரது மகள் பிரீத்தி (25). கோவையிலுள்ள ஒரு தனியாா் கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தாா்.

பொது முடக்கத்தால் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கோவையிலிருந்து உதகைக்கு வந்த அவா் பெற்றோருடன் தங்கியிருந்தாா். இந்நிலையில் அவா் வீட்டிலுள்ள ஒரு அறையில் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக உதகை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com