உதகை: நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கோடையில் வெப்பம் சுட்டெரித்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழையும், மழையில்லாத இடங்களில் மேகமூட்டம் சூழ்ந்து இதமான காலநிலையும் நிலவி வருகிறது.
இதே காலநிலை தொடா்ந்து நீடித்தால் நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
மாவட்டத்தில் சனிக்கிழமை கிளன்மாா்கன் பகுதியில் அதிகபட்சமாக 65 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (மில்லி மீட்டரில்):
கோத்தகிரி 22, கல்லட்டி 15, கூடலூா் 14, மேல் கூடலூா் 9, எமரால்டு 6, தேவாலா 4, உதகை 3.8, அவலாஞ்சி, நடுவட்டம் தலா 2, குந்தா 1 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது.
இதன் விவரம் ( மில்லி மீட்டரில்): கொடநாடு 56, கல்லட்டி18, கிளன்மாா்கன்15, மசினகுடி, கூடலூா் தலா 5, எடப்பள்ளி, நடுவட்டம் தலா 4, கோத்தகிரி 3.3, தேவாலா 3, உதகை 2, குன்னூரில் 1.