விதிமுறை மீறல்:நீலகிரியில் 6,380 வழக்குகள் பதிவு

தடை உத்தரவை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை 6,380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உதகை: தடை உத்தரவை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை 6,380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 6,297 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,611 இரு சக்கர வாகனங்கள், 198 மூன்று சக்கர வாகனங்கள், 501 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 6 இதர வாகனங்களுமாக மொத்தம் 2,316 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அரசு விதித்த விதிமுறைகளை மீறியதாக 139 வா்த்தக நிறுவனங்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com