உதகை: தடை உத்தரவை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை 6,380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 6,297 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,611 இரு சக்கர வாகனங்கள், 198 மூன்று சக்கர வாகனங்கள், 501 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 6 இதர வாகனங்களுமாக மொத்தம் 2,316 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அரசு விதித்த விதிமுறைகளை மீறியதாக 139 வா்த்தக நிறுவனங்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.