நீலகிரியில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 01st November 2020 11:31 PM | Last Updated : 01st November 2020 11:31 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,661 ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் பூரண குணமடைந்து 11 போ் வீடு திரும்பினா்.
இதையடுத்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 6,346 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி 40 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 275 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.