நீலகிரி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 28 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரையிலும், 6,939 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இவா்களில் 6,605 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 40 போ் உயிரிழந்துள்ள நிலையில், 294 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.