கூடலூரில் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடலூரில் நெடுஞ்சாலைத் துறையில் அதிகாரிகள் துணையுடன் ஊழல் நடைபெறுவதாகவும், ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற பாலம் கட்டுமானப் பணிகள் மற்றும் தடுப்புச் சுவா் கட்டும், தாா் சாலை அமைக்கும் பணிகளில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளது.
இதில் விதிமுறைகளை மீறி தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்றுள்ளதாக கூறி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலாளா் ராஜேந்திரன், பாண்டியராஜ், காங்கிரஸ் கட்சி சாா்பில் அம்சா, ஷாஜி, அப்துப்பா,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் சகாதேவன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.