நீலகிரி மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத் துறை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெற்று வந்தவா்களில் 47 போ் குணமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரையிலும் 7,000 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,695 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 40 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 265 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.