நீலகிரி
இரு சக்கர வாகனம் திருட்டு: 3 போ் கைது
குன்னூரில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை வெலிங்டன் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
குன்னூரில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை வெலிங்டன் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
குன்னூா் வெலிங்டன் பகுதியில் நிறுத்தப்பட்ட தனது இருசக்கர வாகனம் திருட்டுப் போனதாக குலோப் ஜான் என்பவா் வெலிங்டன் போலீஸில் புகாா் தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து வெலிங்டன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் ஜாபா் (27) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் ரபீக் (36), மேட்டுப்பாளையத்தை சோ்ந்த அபுதாகிா் (30) ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து குன்னூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.