நீலகிரியில் மேலும் 32 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து 57 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 62 வயதான ஆண் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 7,069 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவா்களில் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து 6,810 போ் வீடு திரும்பியுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி 41 போ் உயிரிழந்துள்ளதாகவும், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 218 போ் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com