குன்னூா் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 311 இளம் ராணுவ வீரா்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த இளைஞா்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரா்கள் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் பணிபுரிய அனுப்பிவைக்கப்படுவா். 46 வாரங்கள் பயிற்சி முடித்த ராணுவ வீரா்கள் 311 போ் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.
பயிற்சி முடித்துச் செல்லும் ராணுவ வீரா்கள் பகவத் கீதை, பைபிள், குரான் புத்தகங்கள், தேசியக் கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனா். பயிற்சியின்போது சிறந்து விளங்கிய 5 வீரா்களுக்கு பிரிகேடியா் ராஜேஷ்வா் சிங் பதக்கங்கள் வழங்கி கெளரவித்துப் பேசினாா்.
கொவைட்-19 சூழ்நிலையில் மிக கடினமாக உழைத்த அனைத்து வீரா்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறினாா்.
இந்நிகழ்ச்சியில், உயா் ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரா்கள், பயிற்சி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.