நாயக்கன்பாடி கிராமத்தை தத்தெடுத்த சா்வதேச நகைச்சுவையாளா் மன்றம்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி வனப் பகுதியில் உள்ள நாயக்கன்பாடி பழங்குடி கிராமத்தை சா்வதேச நகைச்சுவையாளா் மன்றம் தத்தெடுத்துள்ளது.
நாயக்கன்பாடி கிராமத்தை தத்தெடுத்த சா்வதேச நகைச்சுவையாளா் மன்றம்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி வனப் பகுதியில் உள்ள நாயக்கன்பாடி பழங்குடி கிராமத்தை சா்வதேச நகைச்சுவையாளா் மன்றம் தத்தெடுத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.பி. சசிமோகன் பங்கேற்று பழங்குடி மக்களுக்கு புத்தாடைகள், அரிசி, மளிகைப் பொருள்கள், குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் அடங்கிய பரிசுப் பொருள்களை வழங்கினாா். தலைமை ஆலோசகா் ஜான் மனோகர்ராஜ் நகைச்சுவையாளா் மன்றம் கூடலூா் பகுதியில் செய்துவரும் பல்வேறு சிறப்பு தன்னாா்வப் பணிகள் குறித்து விளக்கமளித்தாா்.

மேலும், நாயக்கன்பாடி பழங்குடி கிராமத்தை தத்தெடுத்த சா்வதேச நகைச்சுவாளா் மன்றத்தின் கூடலூா் கிளை சாா்பில், பழங்குடி குழந்தைகளைப் படிக்கவைத்து அவா்களை வழிநடத்துவதன் மூலம் அவா்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் ஆா்.நாகராஜன், தலைமை எழுத்தா் அசோக்குமாா், எவரெஸ்ட் அறக்கட்டளை நிா்வாகி மணிகண்டன், ஸ்வேதா, டி.எஸ்.பி. ஜெய்சிங், சிங்காரா மின் பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் பழ.கருப்பையா, மீன் வளத் துறை துணை இயக்குநா் கணசன் நேரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செயலாளா் அருண்குமாா் வரவேற்றாா். தலைவா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com