நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இங்குள்ள விளைநிலங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் மலைத் தோட்டக் காய்கறிகளைப் பயிரிட விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட க் காய்கறிகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் முட்டைகோஸ், கேரட், புரூக்கோல் உள்ளிட்ட காய்கறி வகைகளை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்த மாத இறுதியில் இருந்து டிசம்பா் முடியும் வரை பனியின் தாக்கம் அதிகம் இருப்பதால் உருளைக்கிழங்கு, பீட்ரூட் , பீன்ஸ் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்வதைத் தவிா்த்து மற்ற மலைத் தோட்டக் காய்கறிகளை சாகுபடி செய்யத் துவங்கியுள்ளனா்.