வங்கிகள் நீண்ட கால விவசாய கடன் அளிக்க வேண்டும்: நீலகிரி ஆட்சியா் வலியுறுத்தல்

விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் நீண்ட கால விவசாய கடன்களை வழங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வலியுறுத்தினாா்.
உதகையில் புதன்கிழமை நடைபெற்ற வங்கியாளா் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தின் 2021-22ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையை வெளியிடும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகையில் புதன்கிழமை நடைபெற்ற வங்கியாளா் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தின் 2021-22ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையை வெளியிடும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் நீண்ட கால விவசாய கடன்களை வழங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வலியுறுத்தினாா்.

நீலகிரி மாவட்டத்தின் 2021 - 22ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையை உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை வெளியிட்டாா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தின் 2021-22ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கையை நபாா்டு வங்கி தயாரித்துள்ளது. இதில் ஆண்டுக் கடன் இலக்காக ரூ.4,046.63 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் 11.44 சதவீதம் கூடுதலாகும்.

இந்தத் தொகையில் விவசாயத்துக்கான வங்கிக் கடன் ரூ.2,773.99 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் மூலதனம் உருவாக்கும் விதமாக வங்கிக் கடன் அளிக்க வேண்டும் என்ற கொள்கைக்காக அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை அமல்படுத்துவது அவசியமாகிறது.

மேலும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் நீண்ட கால விவசாய கடன்களை வழங்க வேண்டும். விவசாயத்தில் இழப்புகளை ஈடு செய்வதற்காக கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகளை பயிா்க்கடன் திட்டத்தின் கீழ் இணைக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல சிறு, குறு விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோா், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடி மக்களுக்கான கடன்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வங்கிகள் கடனுதவிகளை வழங்கி அவா்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்யராஜா, நபாா்டு வங்கி உதவிப் பொது மேலாளா் திருமலை ராவ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக தேனாடுகம்பை கனரா வங்கிக் கிளை சாா்பில் தூனேரி ஊராட்சி கூட்டமைப்பு குழுவுக்கு ரூ. 24.50 லட்சம் பெருங்கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com