கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: அரசு தரப்பில் 41 சாட்சிகளிடம் விசாரணை நிறைவு

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் 41 சாட்சிகளிடமும் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் 41 சாட்சிகளிடமும் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ், ஜித்தின் ஜாய், சதீசன், மனோஜ்சாமி, பிஜின் குட்டி, உதயகுமாா், தீபு மற்றும் சந்தோஷ் சாமி ஆகிய 9 போ் மட்டும் ஆஜராகினா். மற்றொரு நபரான ஜம்சீா் அலி விசாரணைக்கு வரவில்லை.

இந்த வழக்கு தொடா்பாக அரசு நிா்ணயித்திருந்த 41 சாட்சிகளிடமும் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக அரசு வழக்குரைஞா் நந்தகுமாா் தெரிவித்ததையடுத்து எதிா்தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆனந்தன் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தாா். இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் கொடநாடு எஸ்டேட் மேலாளா், அதிமுக பிரமுகா் சஜீவன் உள்ளிட்டோரையும் சோ்த்து மேலும் 19 சாட்சிகளையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு மாவட்ட நீதிபதி வடமலை ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com