நீலகிரி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி புதிதாக 18 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பெற்று வந்த 24 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 7,194 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 7,009 போ் குணமடைந்துள்ளனா். 40 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 145 போ் சிகிச்சையில் உள்ளனா்.