நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனக் கோட்டத்தில் சீமாா்குழி பகுதியில் இறந்த நிலையில் புலியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
சீமாா்குழி ஓடைப் பகுதியில் வனத் துறையினா் ரோந்து சென்றபோது, புலியின் சடலத்தைப் பாா்த்துள்ளனா். சுமாா் 7 வயதான இந்த பெண் புலியின் நகங்கள் மற்றும் பற்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன.
இறந்த புலியின் உடல் சனிக்கிழமை காலை பிரேதப் பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.