உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 21 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 7,202 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,026 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 40 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 136 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.