கரோனா விதிகளை மீறி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பிரமுகருக்கு அபராதம்

குன்னூரில் கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியே வந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநிலச் செயலாளா் பி.ஜெயராமனுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்.

குன்னூா்: குன்னூரில் கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியே வந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநிலச் செயலாளா் பி.ஜெயராமனுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது

நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்தவா் பி.ஜெயராமன். இவா் அதிமுகவின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநிலச் செயலாளராக உள்ளாா். இவரது மகனுக்கு கரோனா தொற்று இருந்த நிலையில் அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 25ஆம் தேதி நடைபெற்ற நகரும் நியாய விலைக் கடை நிகழ்ச்சியில் தடையை மீறி பி.ஜெயராமன் பங்கேற்றாா்.

இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட நிா்வாகத்தின் விசாரணைக்குப் பின் பி. ஜெயராமனுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதத்தினை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com