நீலகிரியில் விடிய விடிய பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவிலிருந்து விடிய விடிய பரவலாக மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவிலிருந்து விடிய விடிய பரவலாக மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பரவலாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை பகலிலேயே தொடங்கிய மழை இரவிலும் நீடித்தது. இதில் நடுவட்டத்தில் அதிகபட்சமாக 76 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கேரள மாநிலத்தையொட்டியுள்ள பகுதிகளிலேயே மழையின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. தொடா் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிரும் நிலவுகிறது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு(அளவு மி.மீரில்):

அவலாஞ்சி-67, பந்தலூா்-46, செருமுள்ளி-45, தேவாலா, பாடந்தொறை தலா 44, கூடலூா்-42, மேல் கூடலூா்-40, கிளன்மாா்கன்-32, சேரங்கோடு-19, எமரால்டு-17, ஓவேலி-15, உதகை, கல்லட்டி தலா 12, குந்தா-8, கோத்தகிரி-7, கீழ் கோத்தகிரி-5, மசினகுடி, கேத்தி, உலிக்கல் தலா 4, கெத்தை-3, கிண்ணக்கொரை-2 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com