நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காலத்தில் 6,759 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.67 லட்சத்து 59,000 நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னா் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவி வழங்கி பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 உதவித் தொகையை அவா்களது வீடுகளுக்கே சென்று வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.
இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் 6,759 மாற்றுத் திறனாளிகளுக்கு அவரவா் வீடுகளுக்குகே சென்று தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையாக மொத்தம் ரூ.67 லட்சத்து 59,000 வழங்கப்பட்டுள்ளது என்றாா்.