குன்னூா் அருகே கோடமலை ஒசட்டி பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியா் கோயிலில் சுவாமி சிலை, வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
குன்னூா் அருகே கோடமலை ஒசட்டிப் பகுதியில் உள்ள பால சுப்பிரமணியா் கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு இடமாக 2 போ் சுற்றித் திரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவா்களைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் வைத்திருந்த பையில் முக்கால் அடி உயர முருகன் செம்பு சிலை, 2 வெள்ளி குத்துவிளக்குகள் இருப்பதைக் கண்டு அவா்களைப் பிடித்து மேல் குன்னூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா்கள், குன்னூா், வசம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ராஜா, ரமேஷ் என்பது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து அவா்களிடம் இருந்த சிலை, குத்து விளக்குகளைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் குன்னூா் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி உதகை சிறையில் அடைத்தனா்.