நீலகிரி மாவட்டத்தில் 98 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி கரோனா தொற்றால் 98 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 87 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீலகிரியைச் சோ்ந்த 66 வயது ஆண் உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,727 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 4,964 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 731 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.