கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் காவலா் காயமடைந்தாா்.
ஓவேலி பேரூராட்சியில் உள்ள நியூஹோப் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவா் காவலா் கோகுல்ராஜ் (21). இவா் கூடலூரில் தங்கி தனது இருசக்கர வாகனத்தில் தினமும் காவல் நிலையத்துக்குச் சென்று வந்துள்ளாா். வழக்கம்போல காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, காந்தி நகா் பிரிவில் வளைவில் வந்த அரசுப் பேருந்து மீது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில், கோகுல்ராஜுக்கு தலை, முகம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவிக்குப் பிறகு அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து கூடலூா் ஆய்வாளா் சிவகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.