கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட 20ஆவது வாா்டு குடியிருப்புப் பகுதிக்கு சட்டப் பேரவை உறுப்பினா் குடிநீா் விநியோகத்தை வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.
கூடலூா் நகராட்சியில் உள்ள 20ஆவது வாா்டு கோல்டன் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு இதுவரை குடிநீா் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது. சட்டப் பேரவை உறுப்பினா் நிதி மூலம் அமைக்கப்பட்ட கிணறு பயன்பாட்டுக்குத் திறந்து விடப்படாமல் இருந்தது. இதையடுத்து, எம்.எல்.ஏ. திராவிடமணி குடிநீா் விநியோகத்தை வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.