குன்னூரில் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுக்கள் உள்பட 1032 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 16 லட்சம் கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
குன்னூா் பாரஸ்ட் டேல் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கப்பச்சி வினோத் ஆகியோா் கலந்து கொண்டு 10க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 55 லட்சம் கடன் தொகையை வழங்கி பேசினாா். மேலும் கரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் குன்னூா் எடப்பள்ளி, இளிதுரை, கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள 1032 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. மொத்தம் சுமாா் ரூ. 4 கோடியே 16 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் கனகராஜ், வங்கி மேலாளா் ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்