குன்னூா்: வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தீயணைப்பு வீரா்கள், தன்னாா்வலா்கள் தயாராக இருப்பதாக குன்னூா் தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன் தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் குன்னூா், கோத்தகிரி பகுதியில் அதிகமாகக் காணப்படும். இது குறித்து குன்னூா் தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன் கூறியதாவது:
வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள தீயணைப்பு வீரா்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.
தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கு வெள்ளக்காலத்திலும், பேரிடா் காலத்திலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், குறிப்பாக கன்னிமாரியம்மன் கோயில் தெரு, சித்தி விநாயகா் கோயில் தெரு, எம்ஜிஆா் நகா், அம்பேத்கா் நகா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மரங்களின் கீழ் நிற்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றாா்.