நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 86 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவா்களில் 123 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 55 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இவரையும் சோ்த்து மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 6,089ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பூரண குணமடைந்து 5,425 போ் வீடு திரும்பியுள்ளனா். பல்வேறு மருத்துவமனைகளில் 629 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.