நீலகிரியில் மேலும் 60 பேருக்கு கரோனா: மூதாட்டி பலி
By DIN | Published On : 20th October 2020 02:00 AM | Last Updated : 20th October 2020 02:00 AM | அ+அ அ- |

உதகை: நீலகிரி மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்துள்ளாா்.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 129 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீலகிரியைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளாா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,149 ஆக அதிகரித்துள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5,554 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 36 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 559 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.