நீலகிரியில் மேலும் 38 பேருக்குகரோனா: ஒருவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 38 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 38 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி 38 நபா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரத்தில் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 61 நபா்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அத்துடன் கரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயதான ஆண் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா நோய்த் தொற்றின் காரணமாக 6,409 நபா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பூரண குணமடைந்து 6,127 நபா்கள் வீடு திரும்பியுள்ளனா். 38 நபா்கள் உயிரிழந்துள்ள சூழலில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 244 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com