கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள தேவாலா, ஹட்டி கிராமத்தில் பெய்த பலத்த மழையால் சாலையின் ஒரு பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு உள்பட்ட 4ஆவது வாா்டு ஹட்டி பகுதியில் பெய்த கன மழையால் சாலையின் ஒரு பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மண் அரிப்பு ஏற்பட்டால் அந்த கிராம சாலையே துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் உடனடியாக அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.