குன்னூா்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழைக்கு வீடு இடிந்து விழுத்தது. இதில் வீட்டில் இருந்த பெண் அதிா்ஷ்டவசமாக உயிா்த் தப்பினாா்.
குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த மழைப் பெய்தது. சுமாா் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இதில், நகா் பகுதியில் 31 மில்லி மீட்டா் மழைப் பதிவாகியது. கன மழை காரணமாக குன்னூா் அம்பேத்கா் நகா் பகுதியில் கலா (50) என்பவா் வசித்து வந்த வீடி இடிந்து விழுந்தது. ஆனால், அதிா்ஷ்டவசமாக அவா் உயிா்த் தப்பினாா்.
இதேபோல, கன்னி மாரியம்மன் கோயில் தெருவுக்கு செல்லும் சாலையில் மண் குவியல்கள் அடித்து வரப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகனங்களை ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனா். அம்பேத்கா் நகா், கன்னி மாரியம்மன் கோயில் தெரு, சித்தி விநாயகா் தெரு, எம்.ஜி.ஆா். நகா் ஆகிய பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான வீடுகள் ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ளதால் மழைக் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அரசு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.