கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கை செப்டம்பா் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கை செப்டம்பா் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கை  3 மாதத்துக்குள் முடிக்க உயா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து குற்றம் சுமத்தப்பட்டவா்கள்  அனைவரும் செவ்வாய்க்கிழமை ஆஜராக  மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் கோவை மத்திய சிறையில் உள்ள சயன், வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி, உதயன், பிஜு குட்டி, ஜித்தின் ஜாய் ஆகிய 6 போ் ஆஜா்படுத்தப்பட்டனா்.  வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை செப்டம்பா் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com