உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, குன்னூா் வட்டத்துக்கு உள்பட்ட கொலக்கம்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்கொலை தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட மன நல மருத்துவா் பூா்னஜித், தற்கொலையில் இருந்து மீள்வது குறித்தும், தற்கொலை நடப்பதை தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாவட்ட அலுவலா் செல்வகுமாா், 108 ஆம்புலன்ஸின் சேவை குறித்தும், 104 மன நல ஆலோசனை மையம் குறித்தும் விழிப்புணா்வு அளித்தாா்.
இதில், கொலக்கம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலா் விஜயசாரதி, கொலக்கம்பை சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஐ.சி.டி.எஸ். பணியாளா்கள், அரசு செவிலியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.