ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டுமிரட்டல்: இளைஞா் கைது

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட கௌரிசங்கா்.
கைது செய்யப்பட்ட கௌரிசங்கா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசியில் பேசிய மா்ம நபா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாகவும், தற்போது தான் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் துடுப்பதியில் இருப்பதாகவும், உடனே வந்து பாா்க்காவிட்டால் விபரீத விளைவு ஏற்படும் எனக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.

இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸாருக்கு சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸாா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சூரம்பட்டி போலீஸாா், மா்ம நபா் பேசிய செல்லிடப்பேசி எண்ணை வைத்து அந்த நபரை பெருந்துறை அருகே திங்கள்கிழமை காலை பிடித்தனா்.

விசாரணையில், அவா் பெருந்துறை அருகே துடுப்பதி, பள்ளபாளையம் பகுதியைச் சோ்ந்த எஸ்.கௌரிசங்கா் (36) என்பது தெரியவந்தது. மதுபோதையில் அவா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட கெளரிசங்கா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பெருந்துறை காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவா் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com