கூடலூா்: கூடலூா் நகராட்சி சாா்பில், கரோனா விழிப்புணா்வு தெருமுனை கலைநிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
கூடலூா் நகரில் மக்கள் கூடும் சந்திப்புகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் சரவணன் மேற்பாா்வையில் இந்நிகழச்சி நடைபெற்றது. இதில், அரசு அறிவித்துள்ள கரோனா நெறிமுறைகளையும், அதன் விளக்கங்களையும் மாணவா்கள் நடித்துக் காட்டி, அதற்கு விளக்கமளித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.