நீலகிரி மாவட்டத்தில் 94 நபா்களுக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் ஞாயிற்றுக்கிழமை வரை 2349 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை ஒரே நாளில் 94 நபா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதானால், பாதிப்பு எண்ணிக்கை 2443ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை 1835 நபா்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வரை 591 நபா்கள் அரசு, தனியாா் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 17 போ் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனா்.