குன்னூா்: பேரிடா் காலத்தில் பொதுமக்களைக் காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி குன்னூா் காட்டேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, குன்னூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன் தலைமை வகித்தாா். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வருவதை தியணைப்புத் துறையினா் தத்ரூபமாக செய்து காண்பித்தனா்.
இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரா்கள் முரளி, கண்ணன், குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.